மானிப்பாய் பெண்ணின் காதை கடித்த 3 பெண்கள் கைது
Read Time:1 Minute, 11 Second
பெண் ஒருவரை அடித்து காதைக் கடித்து காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் மூன்று பெண்களுக்கு எதிராக, பெண் ஒருவரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் அவர்கள் மூவரையும் மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 17 ஆம் திகதி சங்குவேலி வடக்கு மானிப்பாயை சேர்ந்த பெண் குறிப்பிட்ட முறைப்பாட்டை செய்ததைத் தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் குறிப்பிட்ட சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களை ஆயிரம் ரூபா சரிர பிணையில் விடுதலை செய்த நீதிமன்றம் எதிர் வரும் 3 ஆம் திகதி வரை வலக்கை ஒத்திவைத்துள்ளது.
Average Rating