விமானி அறையை கழிவறையாக நினைத்து, நுழைந்த பயணி கைது
ஆஸ்திரேலியாவின் வெர்ஜின் பயணிகள் விமானம், பிரிஸ்பேன் நகரிலிருந்து இந்தோனேஷியாவின் டென்பசாருக்கு நேற்று முன்தினம் புறப்பட்டு சென்றது. இந்த விமானம் தரைஇறங்க வேண்டிய நேரத்தில் ஒரு பயணி, விமானியின் அறையில் அத்துமீறி நுழைய முற்பட்டார்.
அவர் விமானத்தை கடத்த முயற்சிப்பதாக விமானி கருதி, விமானத்தை அவசரமாக பாலிதீவில் தரை இறக்கினார். அந்த ஆசாமி கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ருசிகர தகவல் வெளியானது.
மேத்யூ லாக்லே என்ற அந்த ஆஸ்திரேலிய பயணி, விமானத்தில் தூங்கிக்கொண்டிருந்தாகவும், விமானம் தரையிறங்கப்போவது குறித்து விமான உதவியாளர் கூறி தன்னை எழுப்பி விட்டதாகவும், அந்த தூக்க கலக்கத்தில் தான் கழிவறை என நினைத்து விமானி அறையை வலுக்கட்டாயமாக திறந்து உள்ளே நுழைய முற்பட்டதாகவும் போலீஸ் விசாரணையில் தெரிவித்தார்.
அவரது ரத்த பரிசோதனையில், அவர் நிறைய வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொண்டிருந்தது தெரியவந்தது. முதலில் அவர் குடிபோதையில் இருந்ததாக தகவல்கள் வெளியானது நினைவுகூரத்தக்கது.
Average Rating