ஆசிரமத்திற்கு வரும் பெண்களிடம் பாலியல் அத்துமீறல்; சாமியார் தலைமறைவு
இந்தியா கர்நாடகாவைச் சேர்ந்த சாமியார் ஒருவர் தன்னிடம் ஜோதிடம் பார்க்க வந்த பல இளம் பெண்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்து கொள்வது தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இரவது செயற்பாடுகளை வெளிப்படுத்தும் காணொளி ஒன்று கடந்த சனிக்கிழமை இந்திய தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பானது,
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பக்தர்கள் அவருடைய ஆசிரமத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
குருஜி ஸ்ரீ ராமசுவாமி தேவி ஸ்ரீ கோலார் மாவட்டத்தைச் சேர்ந்தவர். கடந்த 3 வருடங்களாக பெங்களூரில் ஆசிரமத்தை நடத்தி வருகிறார்.
பெரும்பாலான இந்திய தொலைக்காட்சிகளில் ஜோதிடம், பூஜைகள் குறித்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.
இதனால் கர்நாடகாவில் சில அரசியல், சினிமா பிரபலங்கள் குருஜி ஸ்ரீ ராமசுவாமி தேவி ஸ்ரீசாமியாரின் பக்தர்களாக மாறினர்.
இந்நிலையில் குருஜி ஸ்ரீ ராமசுவாமி தேவி ஸ்ரீ பல இளம்பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்துகொள்வது போன்ற காணொளி காட்சிகள் ஒரு இந்திய தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பானது.
இந்த காட்சிகள் கடந்த வருடம் ஏப்ரல் 27 ஆம் திகதி அவருடைய ஜோதிட நிலையத்தில் பதிவு செய்யப்பட்டவை என தெரியவருகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பக்தர்களும், அவருடைய ஆசிரமத்தை முற்றுகையிட்டனர்.
தன்னைத் தேடி வரும் இளம்பெண்களுக்கு தோஷம் கழிப்பதாகக் கூறி சாமியார் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார்.
சாமியார் குருஜி ஸ்ரீ ராமசுவாமி தேவி ஸ்ரீ தலைமறைவாகி உள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.
Average Rating