கையடக்கத் தொலைபேசியை திருடிய பொலிஸ் கான்ஸ்ரபிள் கைது
Read Time:57 Second
கையடக்கத் தொலைபேசி ஒன்றைத் திருடிய பொலிஸ் கான்ஸ்ரபிள் கொஹவலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்ரபிள் நவகமுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர் என்பது தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் நுகேகொடையில் உள்ள அழகு சிகிச்சை நிலையமொன்றில் பணிபுரியும் பெண் ஒருவரது 15,000 ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசியை திருடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பொலிஸ் கான்ஸ்ரபிள் நுகேகொடை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஒருலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
Average Rating