இந்தியா சென்ற ஈழ அகதிகள் புழல் சிறையில் அடைப்பு
அகதிகளாக சென்றவர்களில் குழந்தைகளை தவிர எஞ்சிய 5 பேர் மீதும் கடவுச் சீட்டுச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
இதையடுத்து அகதிகள் தயாபரராஜன், உதயகலா, தவேந்திரன், கணேஷ் சுதாகர், ரமேக்கா ஆகியோரை பொலிஸார் இராமேஸ்வரம் நீதிமன்றத்தில் நேற்று இரவு ஆஜர்படுத்தினர்.
ஆஜர்படுத்தப்பட்ட 5 பேரையும் இம்மாதம் 19 ம் தேதி வரை சிறையில் அடைக்குமாறு நீதிபதி சரவணகுமார் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து அகதிகள் அனைவரும் சென்னை புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இலங்கை அரசு தமிழ் அமைப்புகள் மீது விதித்துள்ள தடையினை இந்திய அரசு ஏற்று கொண்டுள்ள நிலையில் இலங்கையில் இருந்து அடைக்கலம் தேடி அகதிகளாக வந்தவர்கள் மீது பாஸ்போர்ட் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸாரின் நடவடிக்கைக்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் கண்.இளங்கோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
Average Rating