பிணையில் விடுதலையான பின், தாயின் இடுப்பை உடைத்த மகன் மீண்டும் கைது
சொத்துக்களைக் கேட்டு தாயை தாக்கி துன்புறுத்திய குற்றத்தின் பேரில் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நபரொருவர் மீண்டும் தனது தாயை மண்வெட்டியால் தாக்கி இடுப்பு எலும்பை முறித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு தம்புத்தேகம நீதிமன்ற நீதிவான் சாமர கெக்கிரிதெனியவினால் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
கொச்சியாகம மானெல்வௌயைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு விளக்க மறியலில் வைக்கப்பட்டவராவார். தாயை கொடுமைப் படுத்திய குற்றத்திற்காக பெப்ரவரி 25 ஆம் திகதி நிதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட மார்ச் 4 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்ட இந்த நபர் மீண்டும் 4 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது தாய் சட்டத்தரணி ஒருவர் மூலம் இந்த நபரை பிணையில் விடுவித்தார். அப்போது நீதிமன்றம் இனிமேல் தாயை நன்றாக கவனித்துக் கொள்ளும்படி உத்தரவிட்டு பிணையில் விடுவித்தது.
சந்தேக நபர் நீதமன்ற உத்தரவை அலட்சியப்படுத்திவிட்டு சொத்துகளை கேட்டு அடிக்கடி துன்புறுத்தி வந்ததாகவும் கடந்த 6 ஆம் திகதி தாயை மண்வெட்டியால் தாக்கியதில் இடுப்பு எலும்பு முறிந்து கொச்சியாகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதாகவும் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
Average Rating