மக்களை மிரட்டி கொள்ளையிட்ட ஐவர் கைது
Read Time:1 Minute, 3 Second
மக்களை மிரட்டி அவர்களின் பணம் மற்றும் பொருட்களை கொள்ளையிட்டதாகக் கூறப்படும் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வெலிபெத்த, ஹோமாகம மற்றும் ஊரகஸ்மங்கந்திய ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே, இவர்கள் கைதாகியுள்ளனர்.
சந்தேகநபர்களால் பணம், மோட்டார் சைக்கிள் மற்றும் தங்காபரணங்கள் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது ஐந்து துப்பாக்கிகள், கை்குண்டு, மோட்டார் சைக்கிள்கள் மூன்று, முச்சக்கர வண்டி மற்றும் தங்க நகைகளும் சந்தேகநபர்கள் வசமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
இவர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Average Rating