அடுத்தது நீதான்… மலேசிய விமான பயணியின் தோழிக்கு, சீனாவிலிருந்து வந்த கொலை மிரட்டல்..
மாயமான மலேசிய விமானத்தில் பயணம் செய்தவரின் பெண் தோழி, தனக்கு குறிப்பிட்ட ஒரு சீன தொலைபேசி எண்ணில் இருந்து தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாக புகார் அளித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி ஐந்து இந்தியர்கள் உட்பட 239 பேருடன் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங்கிற்கு புறப்பட்டுச்சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் திடீரென நடுவானில் மாயமானது.
அந்த விமானம் விபத்தில் சிக்கியிருக்கலாம் என மலேசிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது. இந்த விமானம் இந்திய பெருங்கடலின் தென்பகுதியில் விழுந்து நொறுங்கி இருக்கக்கூடும் என்ற யூகத்தின் பேரில், ‘புளுபின்-21’ என்ற நீர்மூழ்கி ‘ரோபோ’வை கொண்டு நடந்துவரும் தேடுதல் வேட்டையிலும் பலன் இல்லை.
ஆனபோதும், மாயமான விமானத்தைக் குறித்து தொடர்ந்து முரண்பட்ட தகவல்கள் வெளி வருவது குழப்பத்தை அதிகரிப்பதாகவே உள்ளது.
இந்நிலையில் விமானத்தில் பயணம் செய்த அமெரிக்க பயணியான பிலிப் வூட் என்பவரது தோழி சாரா விமானம் மாயமானதிலிருந்து தனக்கு தொடர்ச்சியாக கொலை மிரட்டல் வருவதாக தெரிவித்துள்ளார்.
Average Rating