கனடாவுக்கு வெற்றி விழா பிடிக்காவிட்டால் மூடுங்கள் வாயை :இலங்கை
போர் வெற்றிக் கொண்டாட்டங்களில் பங்கேற்க விரும்பாவிட்டால் அதனை அரசாங்கத்திடம் தெரிவித்து விட்டு அமைதியாக இருந்திருக்க வேண்டுமே தவிர, பகிரங்க அறிவிப்புக்களை விடுத்திருக்க கூடாது என வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
போர் வெற்றிக் கொண்டாட்டங்கள் இலங்கையின் நல்லிணக்கத்தை மோசமாக பாதிக்கும் என்பதால் மாத்தறையில் நடைபெறும் போர் வெற்றிக் கொண்டாட்டங்களில் பங்கேற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரிப்பதாக கனேடிய உயர்ஸ்தானிகர் வைட்டிங்ஆங்கில ஊடகமொன்றுக்கு அண்மையில் தெரிவித்திருந்தார்.
எனினும், வைட்டிங்கின் இந்த பகிரங்க அறிவிப்பு இலங்கை அரசாங்கத்தை கடும் அதிருப்தியடைச் செய்துள்ளது. அவருடைய இந்த நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனபதால் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகரை அழைத்து உத்தியோகபூர்வமாக இலங்கை அரசு தனது எதிர்ப்பை வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, போர் வெற்றிக் கொண்டாட்டங்களை நடாத்துவது நல்லிணக்கத்தை பாதிக்கும் என கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயார்ட்டும் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Average Rating