இந்திய மீனவர்கள் 24 பேர் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது
Read Time:1 Minute, 3 Second
யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் 24 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில், நேற்றிரவு இந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களின் 6 படகுகள் கைப்பற்றப்பட்டதாகவும் கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட பணிப்பாளர் என்.கணேசமூர்த்தி குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் தற்போது யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த மீனவர்கள் காங்கேசன்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட பணிப்பாளர் கூறினார்.
Average Rating