மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பலாத்காரத்திற்கு உட்படுத்திய இராணுவம் கைது

Read Time:1 Minute, 57 Second

rape.sexமனவளர்ச்சி குன்றிய 15 வயதுச் சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய இராணுவ பொறியிலளார் ஒருவர் முந்தல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 1.30 மணியளவில் இந்நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாணதுறை, தல்துவ பிரதேசத்தைச் சேர்ந்த இராணுவ பொருளியலாளராக கடமையாற்றிய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நபர் கம்பொல – நாகொல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

கடந்த 19ஆம் திகதி 4.30 மணியளவில் முந்தல், நவதன்குலம் – வீகேன்கட்டுவ வீதிப் பிரதேசத்தில் சந்தேகநபர் சிறுமியை பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளதாக சிறுமியின் தயாரால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இராணுவ சிப்பாய் ஒருவரது வீட்டு கட்டுமானப்பணிகள் காரணமாக குறித்த சந்தேகநபர் முந்தல் – நவதன்குளம் பிரதேசத்திற்குச் சென்று தங்கியிருந்த நிலையில் இந்த குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைகளுக்காக முந்தல் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்தியாவில் டக்ளஸின் கொலை வழக்கு பிரச்சினை
Next post குடும்பமொன்றில் அடுத்தடுத்து 4 தலைமுறைகளில், இரட்டைக் குழந்தைகள்