தனுஷ்- ஐஸ்வர்யா பிரிவு? விளக்கம் அளிக்கும் தனுஷ்
இந்திய சினிமாவே அறியப்படும் நடிகராகிவிட்டார் தனுஷ். இவர் தன் மனைவி இயக்கிய 3 படத்தில் நடித்தார் என்பது அனைவருக்கும் தெரியும்,
அதில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்தார்.அந்த சமயத்தில் இருவரும் தனியாக சந்திப்பதாகவும், நெருக்கமாக பல இடங்களுக்கு சென்று வருகிறார்கள் என்றும் பத்திரிக்கைகளில் செய்திகள் வெளிவந்தன.
இதன் பின்பு தனுஷ் தன் மனைவியிடம் சரியாக பேசுவதில்லை என்று சிலர் சொல்லிவந்தனர்.இதற்கு ஏற்றார் போல் இருவரும் சேர்ந்து வெளியே செல்வதை தவிர்த்து வந்த நிலையில் தற்போது இதற்கு முற்றுப்புள்ளி வைத்து வதந்தியை உடைக்கும் பொருட்டு தனுஷ் ஒன்றை செய்துள்ளார்.
அதாவது, தற்போது இவர் பால்கி இயக்கத்தில் இந்திப் படமொன்றில் நடித்து வருகிறார். அப்படத்தின் படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றிருக்கிறார்.
வெளிநாடு செல்லும்போது தன்னுடன் மனைவி ஐஸ்வர்யா மற்றும் குழந்தைகளையும் அழைத்துச் சென்றிருக்கிறார்.
இதன் மூலம் தன்னைப் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் தனுஷ்.
Average Rating