களஞ்சியம் எதிர்ப்பை மீறி அஞ்சலி நடிக்கிறார்!!

Read Time:3 Minute, 0 Second

684cf8bc-5209-47a2-8647-70eba81e0ed9_S_secvpfடைரக்டர் களஞ்சியம் எதிர்ப்பை மீறி ஜெயம் ரவி படத்தில் அஞ்சலி நடிக்கிறார். படப்பிடிப்பு சென்னையில் நாளை (3-ந்தேதி) துவங்குகிறது. இதற்காக அஞ்சலி ஐதராபாத்தில் இருந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு சென்னை வருகிறார். இது எதிர்ப்பு கோஷ்டியை ஆத்திர மூட்டியுள்ளது.

களஞ்சிளம் ஊர் சுற்றி புராணம் என்ற படத்தை அஞ்சலியை நாயகியாக நடிக்க வைத்து எடுத்தார். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பாதியிலேயே அந்த படத்தை போட்டு விட்டு அஞ்சலி ஐதராபாத் போய் விட்டார். அந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்றும் அறிவித்து விட்டார்.

அஞ்சலியால் தனக்கு ரூ.1 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும் தனது படத்தை முடித்து கொடுக்க அவரை நிர்ப்பந்திக்க வேண்டும் என்றும் நடிகர் சங்கம் டைரக்டர் சங்கம் போன்றவற்றில் களஞ்சியம் மனு கொடுத்தார். அந்த சங்கத்தினர் படத்தில் நடிக்கும்படி வற்புறுத்தியும் அஞ்சலி கண்டுகொள்ளவில்லை.

தற்போது சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தனது படத்தை முடிக்காமல் ஜெயம் ரவி படத்தில் நடிக்க கூடாது என்றும் மீறி நடித்தார். கோர்ட்டுக்கு போவேன் என்றும் எச்சரித்தார். தயாரிப்பாளர், சங்கில்டு அமைப்பை சேர்ந்த ஜாகுவார் தங்கம் படங்களில் நடிக்க அஞ்சலிக்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.
ஆனால் இந்த எதிர்ப்புகளை மீதி அஞ்சலி ஜெயம் ரவி படத்தில் நடிக்கிறார்.

இது குறித்து அப்படத்தின் டைரக்டர் சுராஜ் கூறும் போது அஞ்சலியை அணுகி கதை சொன்னேன். பிடித்து போய் நடிக்க ஒப்புக் கொண்டார். நாளை படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்கிறார். நடிக்கும் போது பிரச்சினைகள் வந்தால் அஞ்சலி பார்த்துக் கொள்வார் என்றார். படப்பிடிப்பில் எதிர்ப்பாளர்களால் தகராறு ஏற்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதையடுத்து தனியார் செக்யூரிட்டிகள் படப்பிடிப்பில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமணம் செய்வதாக கூறி கல்லூரி மாணவியை கற்பழித்த வாலிபர்!!
Next post புதுமுகத்துடன் ஜோடி சேர 2 கோடி கேட்கவில்லை: சமந்தா!!