வீட்டிலிருந்த பெண் கொலை: பணம் கொள்ளை!!
Read Time:1 Minute, 10 Second
கட்டுகஸ்தோட்ட, உடுவாவல பிரதேசத்தில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
74 வயதான பெண் ஒருவர் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிலிமதலாவ பிரதேசத்தில் வசிக்கும் குறித்த பெண், ஒரு வாரத்துக்கு முன் கட்டுகஸ்தோட்ட பிரதேசத்திலுள்ள அவரது மகளின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
குறித்த பெண் மட்டுமே அந்த வீட்டில் இருந்துள்ள நிலையில், வீட்டுக்குள் புகுந்த நபர் ஒருவர் இந்த கொலையை செய்துள்ளார்.
வீட்டிலிருந்து வெளிநாட்டுப் பணம் உள்ளிட்ட பணத் தொகை கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கட்டுகஸ்தோட்ட பொலிஸார் இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Average Rating