இருநாட்களாக இளைஞனுடன் காட்டில் தங்கியிருந்த சிறுமி: இளைஞன் கைது
14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் 19 வயது இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
அளவத்துகொடை பொலிஸ் பகுதியைச் சேர்ந்த மேற்படி இளைஞனும் சிறுமியும் காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருந்ததாகவும் கடந்த இரண்டு தினங்களாக இருவரையும் காணாத பெற்றோர் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும் இரண்டு தினங்களின் பின் வீடு திரும்பிய சிறுமியிடம் பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளின் போது, இவர்கள் இருவரும் அருகில் உள்ள காட்டுப் பகுதியில் அவ்விரண்டு தினங்களும் தங்கியிருந்ததாகவும் பாலியல் ரீதியில் எவ்வித தொடர்புகளும் மேற்கொள்ளவில்லை எனவும் சிறுமி தெரிவித்துள்ளார்.
எனினும் சம்பவம் தொடர்பாக சந்தேகம் கொண்ட பொலிசார் சிறுமியை கண்டி வைத்திய சாலையில் பரிசோதனைக்காக அனுமதித்துள்ளனர்.
வைத்திய அறிக்கையின் பின்பே அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனப்
பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் கண்டி நீதிமன்றில் ஆஜர்செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
Average Rating