கள்ளக்காதலை தட்டிக்கேட்டதால் மனைவியை அடித்து கொல்ல முயன்ற கணவன்!!
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகில் உள்ள பொம்மணம்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் மகன் ரஞ்சித்குமார் (வயது26). இவரது பெரியம்மா மகள் ராதிகா என்பவருக்கும், இந்திராநகரை சேர்ந்த தேவநாதன் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தேவநாதனுக்கும், அதே பகுதியை சேர்ந்த முத்துராக்கு மகளுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.
இந்த விபரம் ராதிகாவிற்கு தெரியவரவே அதிர்ச்சி அடைந்தார். தனது கணவனின் கள்ளக்காதலை கண்டித்தார். இதனால் அடிக்கடி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
சம்பவத்தன்று இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தேவநாதன், முத்துராக்கு, இவரது உறவினர் முருகேந்திரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ராதிகாவை இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். படுகாயமடைந்த ராதிகா மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அம்மையநாயக்கனூர் போலீசில் இதுகுறித்து ரஞ்சித்குமார் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்குபதிவு செய்து தேவநாதன் மற்றும் முத்துராக்குவை கைது செய்தனர். தப்பி ஓடிய முருகேந்திரனை தேடிவருகின்றனர்.
Average Rating