காதல் திருமணம் செய்த புதுப்பெண்ணை அடித்து கொன்ற கணவர்- மாமியார்!!
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள கீரப்பாளையத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 30). ஆதிவராகநத்தம் கிராமத்தை சேர்ந்த பஞ்சநாதத்தின் மகள் சீதா (28). இவர் பெருமாத்தூரில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்தார்.
சரவணனுக்கும், சீதாவுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் கடந்த மாதம் 15–ந் தேதி ஊரைவிட்டு ஓடிவிட்டனர். இதுபற்றி சீதாவின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதற்கிடையே கடந்த 28–ந் தேதி பண்ருட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் அவர்கள் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் சரவணன் சீதாவை தனது வீட்டுக்கு அழைத்து சென்றார். கடந்த 15–ந் தேதி முதல் சீதாவை திடீரென காணவில்லை. இந்த நிலையில் சரவணன் பண்ருட்டி கோர்ட்டில் சரணடைந்தார். அவர் கோர்ட்டில் எனது மனைவியை நானும், எனது குடும்பத்தாரும் சேர்ந்து அடித்து கொன்றுவிட்டோம் என்று கூறினார்.
திருமணமாகி கணவர் வீட்டுக்கு சென்ற சீதா தனி குடித்தனம் போக வேண்டும் என்று சரவணனிடம் வற்புறுத்தி இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த சரவணன், அவரது தாயார் செல்வி, அக்காள் சகுந்தலா, அக்காள் கணவர் வெங்கடேசன் ஆகியோர் சீதாவை கடந்த 15–ந் தேதி கடவாச்சேரி பகுதிக்கு அழைத்து சென்றனர். அங்கு சீதாவை அடித்து கொலை செய்தனர். பின்னர் தடயங்களை மறைப்பதற்காக அவரது உடலில் தீ வைத்தனர். உடல் பாதி எரிந்த நிலையில் இருந்தது. அதை குழி தோண்டி புதைத்தனர்.
இந்த விவரங்களை சரவணன் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து செல்வி, சகுந்தலா, வெங்கடேசன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். சீதா உடல் புதைக்கப்பட்ட இடம் எது என்று சரியாக தெரியவில்லை. தற்போது சரவணன் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
போலீசார் அவரை காவலில் எடுத்து சீதா பிணம் புதைத்த இடத்தை காட்டும்படி கூற உள்ளனர். அதன்பிறகு பிணத்தை தோண்டி எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த சம்பவம் புவனகிரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating