மட்டு முந்திரிகை காட்டிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு (படங்கள்)!!
Read Time:1 Minute, 7 Second
மட்டக்களப்பு, தாளங்குடா அடர்ந்த முந்திரிகை காட்டிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் இன்று (20) மதியம் 12.00 மணியளவில் இம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
தாளங்குடா சமுர்த்தி வங்கி வீதியிலுள்ள முந்திரிகை காட்டினுள் கழுத்தில் கட்டப்பட்ட நிலையில் இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் 22 வயதுடைய நல்லரெட்ணம் உதயகுமார் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை 9 மணிக்கு வீட்டிலிருந்து தனது துவிச்சக்கர வண்டியில் வந்தவர் சடலமாக காணப்பட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Average Rating