இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கிணற்றில் தள்ளி கொடூரம்!!
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா பகுதியில் 17 வயது பெண் வயல் வேலைக்கு சென்றாள். மாலை வேலை முடிந்து அவள் வீடு திரும்புபோது வழியில் ஒரு மர்ம நபர் அவளை மிரட்டி கடத்தி சென்றார்.
காட்டுப் பகுதியில் மறைவிடத்தில் அந்த பெண்ணை மிரட்டி அவர் பலாத்காரம் செய்தார். பிறகு அந்த பெண்ணை கொல்ல அந்த நபர் முடிவு செய்தார்.
அந்த பெண்ணை பலமாக தாக்கி இழுத்து சென்றார். வயல்வெளியில் இருந்த பெரிய கிணற்றுக்குள் அந்த பெண்ணை தள்ளி விட்டு ஓடி விட்டார்.
கிணற்றுக்குள் விழுந்த அந்த பெண் உதவி கோரி கதறி கூச்சலிட்டாள். ஆனால் அப்போது பலத்த மழை பெய்ததால் அவள் குரல் வெளியில் கேட்கவில்லை.
இரவு முழுக்க அந்த பெண் கிணற்றுக்குள் இருந்த பம்புசெட் குழாயை பிடித்தபடி போராடினாள். காலையில்தான் அவள் குரல் கேட்டு விவசாயிகள் ஓடி வந்து மீட்டனர்.
சுமார் 15 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்கப்பட்ட அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டாள். அவளை பலாத்காரம் செய்து கொல்ல முயன்ற நபரை பொலிசார் தேடி வருகிறார்கள்.
Average Rating