ஆப்கானிஸ்தானில் 10 வயது சிறுமி கற்பழிப்பு: கருணை கொலைக்கு மிரட்டல்!!
Read Time:1 Minute, 17 Second
ஆப்கானிஸ்தானில் குண்டுஷ் மாகாணத்தில் உள்ள அல்டிகும்பாட் என்ற கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி சமீபத்தில் கற்பழிக்கப்பட்டாள். அவளை அக்கிராமத்தை சேர்ந்த 45 வயது தலைவர் கற்பழித்து விட்டார்.
இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் அச்சிறுமி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள். சிகிச்சைக்குப் பின் பெண்கள் பாதுகாப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறாள். இதற்கிடையே, கற்பழிக்கப்பட்ட சிறுமியை கருணை கொலை செய்யும்படி அவளது தந்தையை கிராம மக்கள் மிரட்டுகின்றனர். அவளால் அக்கிராமத்துக்கு அவமானம் நேர்ந்து விட்டதாக கருதுகின்றனர்
இதற்கிடையே கற்பழித்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கிராம தலைவர் தெரிவித்தார். ஆனால் அவள் சிறுமி என்பதால் திருமணம் செய்து தர பெற்றோர் மறுத்துவிட்டனர்.
Average Rating