சென்னையில் பங்களா வீட்டில் விபசாரம்: 6 அழகிகள் மீட்பு!!
சென்னை செம்பாக்கம் வி.ஜி.பி. பொன்நகரில் உள்ள பங்களா வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. விபசார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் கணபதி, இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் அந்த வீட்டை கண்காணித்தனர். அப்போது அங்கு விபசாரம் நடப்பது உறுதியானது.
இதையடுத்து அந்த வீட்டிற்குள் போலீசார் அதிடியாக புகுந்து அங்கிருந்த புரோக்கர்கள் சென்னை ஆர்.ஏ.புரத்தைச் சேர்ந்த எத்திராஜுலு, கொல்கத்தாவைச் சேர்ந்த சேபோஷ் முல்லா ஆகியோரை கைது செய்தனர். மேலும் விபசாரத்தில் ஈடுபட இருந்த ஆந்திர அழகிகள் 3 பேரை மீட்டனர்.
இதே போல் பள்ளிக்கரணை, மாம்பாக்கம் மெயின் ரோட்டில் உள்ள பங்களா வீட்டில் போலீசார் சோதனை செய்த போது விபசாரத்தில் ஈடுபட்ட மும்பை, ஆந்திராவைச் சேர்ந்த அழகிகள் 3 பேரை மீட்டனர். புரோக்கர்கள் மும்பையைச் சேர்ந்த தாராசிங் மர்காம், ஆந்திரா ரகுமாமிலா ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
விபசார வேட்டை நடந்த 2 பங்களா வீடுகளையும் முக்கிய புரோக்கர்கள் நந்து என்ற நந்தகுமார் அவரது தம்பி ராஜீவ் ஆகியோர் வாடகைக்கு எடுத்து வெளி மாநில அழகிகளை அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது. அவர்கள் 2 பேரும் தப்பி ஓடி விட்டனர். அவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating