மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த உதவிய அதிபர், ஆசிரியை விளக்கமறியலில்!!

Read Time:1 Minute, 51 Second

131758272522ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட கடவல தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 16 வயதான பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த உதவிய அதிபர் மற்றும் ஆசிரியை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி சந்கேநபர்கள் இருவரையும் எதிர்வரும் 5ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் அமில ஆரியசேன இன்று (22) உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2007.11.12 அன்று அப்பாடசாலையின் உயர் தரத்தில் கல்வி கற்ற மாணவி ஒருவரை அப்பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக மாணவியினால் கனிகந்ஹேன பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதன்படி பிரதான சந்தேகநபர் மீது நுவரெலியா நீதிமன்றில் தற்போதும் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

குறித்த சம்பவத்திற்கு உதவிய குறித்த பாடசாலையின் அதிபர் திருவானந்தன் நாகராஜ் (38) மற்றும் 35 வயதான அப் பாடசாலையின் ஆசிரியை ஒருவருமே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு எதிராக ஹட்டன் பொலிஸாரால் ஹட்டன் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கின் மீதான தீர்ப்பு அடுத்த மாதம் 5ஆம் திகதி வழங்கப்படும் என ஹட்டன் நீதவான் அமில ஆரியசேன தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவரை தண்டிக்கவும்! ம.தொ.ச!!!!
Next post குழந்தைகள் திருமணம் – இந்தியாவுக்கு 6ம் இடம்!!