அயர்லாந்தில் 9 வயது தம்பியை குத்திக் கொன்ற வாலிபர் தூக்கிட்டு இறந்த பரிதாபம்!!

Read Time:3 Minute, 15 Second

eb550d9c-1f84-46bc-aca9-2f084172efe7_S_secvpfஉடன் பிறந்த தம்பி என்றும் பாராமல் 9 வயது சிறுவனை குத்திக் கொன்ற 20 வயது வாலிபர் தானும் தூக்கிட்டுக் கொண்டு இறந்த சம்பவம் அயர்லாந்து நாட்டின் ஸ்லிகோ மாவட்ட மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அயர்லாந்தின் ஸ்லிகோ மாவட்டத்தில் உள்ள பனாடா பகுதியில் வசிக்கும் ஒரு தம்பதியர், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் தங்களது 9 வயது மகன் பிராண்டன் ஸ்கெஃபிங்ட்டன்-ஐ பார்த்துக் கொள்ளும்படி மூத்த மகன் ஷேன்(20) பொறுப்பில் ஒப்படைத்து விட்டு வெளியே சென்றனர்.

இரவு 8 மணியளவில் அவர்கள் வீடு திரும்பிய போது உடல் முழுக்க கத்திக் குத்து மற்றும் வெட்டுக் காயங்களுடன் சிறுவன் பிராண்டன் ஸ்கெஃபிங்ட்டன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான். அவனுக்கு பக்கத்தில் வீட்டின் சமையல் அறையில் வைத்திருந்த இறைச்சி வெட்டும் கத்தி கிடந்தது.

துடிதுடித்துப் போன சிறுவனின் தந்தை அவசர உதவிக்கு போன் செய்து விட்டு, மூத்த மகனின் கதி என்னவாயிற்று என்பது தெரியாமல் பதற்றமடைந்தார். அவர் வெளியே சென்று தேடிக் கொண்டிருந்த அதே வேளையில், அவரது மனைவி வீட்டின் ஒவ்வொரு அறையாக திறந்துப் பார்த்துக் கொண்டே வந்தார்.

ஒரு அறையின் உள்ளே நாக்கு வெளியே தள்ளிய நிலையில் ஷேன் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருப்பதை கண்ட தாய் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த டாக்டர்கள் பிராண்டனுக்கு அவசர சிகிச்சை அளித்து, சில்கோ மாவட்ட ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றனர்.

அங்கு அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களுக்குள் அவனது உயிர் பிரிந்தது. தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஷேன், கொக்கைன், கஞ்சா போன்ற போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி இருந்தவர் என்றும், வீட்டில் தனது பொறுப்பில் விடப்பட்டிருந்த தம்பியின் குறும்புத் தனத்தை சகித்துக் கொள்ள முடியாமல் அவனை குத்திக் கொன்று விட்டு, செய்த தவறை உணர்ந்த பின்னர் அவரும் தூக்கு மாட்டி தற்கொலை செய்துக் கொண்டிருக்கக் கூடும் எனவும் அப்பகுதி வாசிகள் கருதுகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாலஸ்தீனத்தில் பலி 572-ஆக உயர்வு: போர் நிறுத்தத்துக்கு அமெரிக்கா முயற்சி!!
Next post கொடுங்கையூரில் கல்லூரி மாணவர்களுக்கு ஆபாச படம் விற்பனை: செல்போன் கடை உரிமையாளர் கைது!!