வலிப்பு நோய் மாத்திரையை அதிகளவில் சாப்பிட்ட மாணவி பலி!!

Read Time:1 Minute, 24 Second

e093a4b9-e242-4282-a1ad-bbd65f46137e_S_secvpfதர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ளது சீலநாயக்கனூர். இந்த ஊரை சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் சிவகாமி (16). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு கடந்த 8 ஆண்டுகளாக வலிப்பு நோய் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதற்காக இவர் தினமும் மருந்து சாப்பிட்டு வந்தார். ஆனால் கடந்த சில நாட்களாக அவர் சரியாக மருந்து சாப்பிடவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சிவகாமியின் தாய் மாத்திரை சாப்பிட கோரி சத்தம் போட்டார்.

இதில் மனம் உடைந்த மாணவி மாத்திரை தானே சாப்பிட வேண்டும் என்று கூறி வீட்டில் இருந்த அனைத்து வலிப்பு மாத்திரைகளையும் ஒன்றாக எடுத்து சாப்பிட்டார். இதையடுத்து மயங்கிய அவரை தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வழியிலேயே மாணவி சிவகாமி இறந்து விட்டார்.

இதுகுறித்து ஏரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post துபாயில் வேலைக்காரியை கற்பழித்த ராணுவ அதிகாரிக்கு 7 ஆண்டு சிறை!!
Next post வேதாரண்யம் அருகே காதல் திருமண ஜோடி உண்ணாவிரதம்!!