அரூர் அருகே சமையல் செய்த போது தீயில் கருகி பெண் பலி!!
Read Time:1 Minute, 3 Second
தர்மபுரி மாவட்டம் அரூர் கோபிநாதம்பட்டி ஜெ.ஜெ. நகரை சேர்ந்தவர் சுரேஷ் (30). கல் உடைக்கும் கூலி தொழிலாளி. இவரது மனைவி பூங்கொடி (23). நேற்று பூங்கொடி சமையல் செய்து கொண்டு இருந்த போது தீப்பிடித்து உடல் கருகினார். வலி தாங்க முடியாத அவர் அலறிய போது சுரேஷ் ஓடிச்சென்று காப்பாற்றினார்.இதில் அவர்கள் 2 பேரும் பலத்த தீ காயம் அடைந்தனர். இதையடுத்து அவர்களை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். இங்கு சிகிச்சை பலனின்றி பூங்கொடி இன்று அதிகாலை இறந்து விட்டார். சுரேசுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து அரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating