திருமணம் செய்து வைக்க வற்புறுத்திய தம்பியை தாக்கிய அண்ணன் கைது!!

Read Time:1 Minute, 9 Second

af5a583e-d8f7-42b2-a815-b04b789f021b_S_secvpfநாகுடி அருகே உள்ள கொடி வயல் கிழக்கு கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சுந்தரம் (41). இவர் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அவருக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை.

இந்நிலையில் சொந்த ஊருக்கு வந்த சுந்தரம் தனது அண்ணன் ஆனந்தராஜனிடம் சென்று தனக்கு 40 வயதுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் இதுவரை திருமணம் செய்து வைக்க முயற்சி செய்யவில்லை என அவரிடம் தகராறு செய்துள்ளார்.

இதில் ஆத்திரம் அடைந்த ஆனந்தராஜன் மண் வெட்டியால் சுந்தரத்தை தலையில் வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த சுந்தரம் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த நாகுடி போலீசார் ஆனந்தராஜனை கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கண்ணமங்கலம் அருகே வேலைக்கு சென்ற இளம்பெண் மாயம்!!
Next post ஆண் குழந்தை பிறந்ததால் மனைவியை ஒதுக்கி வைத்த கணவர்!!