கல்வியை சுமக்கும் சிறுமியரை கருவை சுமக்க வைப்பது ஏன்?
Read Time:1 Minute, 18 Second
யாழ். காரைநகர் ஊரி பிரதேசத்தை சேர்ந்த சிறுமிகள் இருவர் கடற்படை சிப்பாய் ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமையைக் கண்டித்தும், அச் சிறுமிகளுக்கு நீதி கோரியும் யாழில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் யாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு முன்பாக இன்று காலை 10.00 மணியளவில் இப்போராட்டம் நடைபெற்றது.
யாழ். பொது நூலகத்தின் முன்பாக கூடிய போராட்டக்காரர்கள் அங்கிருந்து பாலியல் வன்முறைகளுக்கு எதிரான கோஷங்கள் அடங்கிய பாதகைகளுடன் நடைபவணியாக யாழ். நீதிமன்ற கட்டட தொகுதிக்கு முன்பாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை இன்றைய தினம் குறித்த சிறுமிகள் தொடர்பான வழக்கு விசாரணை யாழ். சிறுவர் நீதிமன்றில் நடைபெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating