சூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 9 பேர் கைது!!
Read Time:1 Minute, 8 Second
சட்டவிரோதமான முறையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் இருவர் உட்பட ஒன்பது பேர் மெதமன்டிய வீதி, பனாகொட பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வலான குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலைத் தொடர்ந்து மேற்கொண்ட தேடுதலின்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து 78,579 ரூபா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பாதுக்க, அவிசாவளை, ஹோமாகம, அத்துருகிரிய மற்றும் மீகொட பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர்.
இவர்கள் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் எதிர்வரும் 30ஆம் திகதி ஹோமாகம நீதவான் நீதிமன்றில் ஆஜராகவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Average Rating