கந்தளாயில் பெண் ஒருவர் தீக் குளித்து தற்கொலை!!
Read Time:51 Second
கந்தளாய், பேராறு பிரதேசத்தில் பெண் ஒருவர் தீக் குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
உடலில் மண்ணெண்ணையை ஊற்றி அப் பெண் தீக் குளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடும் எரிகாயங்களுக்குட்பட்ட குறித்த பெண் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
கந்தளாய் பேராறு பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
Average Rating