சஸ்பெண்டு ஆனதால் விஷம் குடித்து உயிரை மாய்த்த ஊழியர்!!
Read Time:1 Minute, 19 Second
தேனி மாவட்டம் கோம்பை காமராஜர் வீதியை சேர்ந்தவர் மார்க்ஸ் (வயது32). கொடைக்கானல் டாஸ்மாக் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
மதுபான விற்பனையில் நடந்த குளறுபடி காரணமாக சஸ்பெண்டு செய்யப் பட்டார். இதனால் மார்க்ஸ் மனமுடைந்தார்.
இதையடுத்து கொடைக்கானலில் வசித்து வந்த மார்க்ஸ் சொந்த ஊரான கோம்பைக்கு இடம் பெயர்ந்தார். வேலை இழந்ததால் வருமானம் இன்றி குடும்பம் நடத்த கஷ்டப்பட்டார்.
இதனால் மனமுடைந்த அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்தார். ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து அவரது மனைவி ராதா கொடுத்த தகவலின் பேரில் கோம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating