ராயபுரத்தில் 3 நாளாக வீட்டுக்குள் பிணமாக கிடந்த பெண்!!

Read Time:1 Minute, 46 Second

1ராயபுரம், குளத்தெருவை சேர்ந்தவர் மெர்லின் (77). ஆங்கிலோ இந்தியன். சொந்த வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது 2 மகள்கள் திருமணமாகி ஆஸ்திரேலியாவில் உள்ளனர்.

கடந்த 3 நாட்களாக மெரிலினின் வீடு பூட்டி கிடந்தது. அவர் வெளியூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று இருக்கலாம் என அக்கம் பக்கத்தினர் நினைத்து இருந்தனர்.

இந்த நிலையில் பூட்டி கிடந்த வீட்டில் இருந்து பயங்கர துர்நாற்றம் வீசியது. இது குறித்து ராயபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் மோகன், சப்–இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் விரைந்து உள்பக்கமாக பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அங்கு வீட்டின் தரையில் படுத்த நிலையில் மெர்லின் பிணமாக கிடந்தார். உடல் மிகவும் அழுகிய நிலையில் காணப்பட்டது. இரவில் வீட்டை பூட்டிவிட்டு அவர் நடந்து சென்ற போது தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என்று தெரிகிறது.

உடலை போலீசார் மீட்டு பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி ஆஸ்திரேலியாவில் உள்ள மெர்லினின் மகள்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post “புளொட்” அமைப்பின் தலைவர் திரு.த.சித்தார்த்தன், செவ்வி..! (வீடியோவில்)
Next post கள்ளக்காதலை விட மறுத்த பெண்ணை அடித்து கொல்ல முயன்ற மனைவிகள்!!