பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவி தற்கொலை!!
Read Time:1 Minute, 14 Second
பெரியகுளம் அருகே உள்ள கொல்லக்காபட்டி புதுகாலனியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்.
இவரது மகன் அனிதா (வயது15). வத்தலக்குண்டுவில் உள்ள ஒரு பள்ளியில் 11–ம் வகுப்பு படித்து வந்தார்.
படிப்பில் அதிக கவனம் செலுத்தாத அனிதா வீட்டு வேலைகளையும் சரியாக செய்வது இல்லையாம். இதனால் பெற்றோர் அவளை கண்டித்தனர்.
இதில் மனமுடைந்த அனிதா நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்தார். ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்த அனிதாவை உறவினர்கள் மீட்டு பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி அனிதா பரிதாபமாக இறந்தார். இது குறித்து தேவதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating