நர்சை காதலித்து ஏமாற்றி உல்லாசம்: வாலிபர் கைது!!
Read Time:1 Minute, 5 Second
திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தலையாம்பள்ளம் சக்கரத்தான் படை பகுதியை சேர்ந்த 19 வயது நர்சு புகார் ஒன்று கொடுத்தார்.
அதில் அப்பகுதியை சேர்ந்த ஸ்ரீதரன் (வயது 28) என்பவர் காதலிப்பதாக கூறினார். திருமணம் செய்வதாக கூறி என்னுடன் உல்லாசமாக இருந்தார்.
இந்த நிலையில் வேறு பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். இதுபற்றி அவரது வீட்டிற்கு சென்று கேட்டேன். அப்போது அவரது குடும்பத்தினர் கொலை மிரட்டல் விடுத்தனர்.
என்னை காதலித்து ஏமாற்றிய ஸ்ரீதரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து ஸ்ரீதரனை கைது செய்தனர்.
Average Rating