குழந்தை இறந்த துக்கத்தில் தாயார் தூக்குப்போட்டு தற்கொலை!!

Read Time:1 Minute, 28 Second

acbe4cb6-830f-43b4-aac4-54471e07f557_S_secvpfபுதுவை பெரியகாலாப்பட்டு முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் குணசேகரன், வெளிநாட்டில் உள்ள தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சரஸ்வதி (வயது 23).

இவர்களுக்கு கடந்த 1 மாதத்துக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு பூமேஷ் என்று பெயரிட்டு சரஸ்வதி மற்றும் குடும்பத்தினர் கொஞ்சி மகிழந்து வந்தனர்.

திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்ட பூமேஷ் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் கடந்த 20 நாட்களுக்கு முன்பு இறந்தான். மகன் இறந்த அதிர்ச்சியை தாங்க முடியாமல் சரஸ்வதி தினமும் அழுது புலம்பி வந்தார். குடும்பத்தினர், உறவினர்கள் சரஸ்வதிக்கு ஆறுதல் அளித்தனர்.

எனினும் மகனின் பிரிவு சோகத்தில் விரக்தியடைந்த சரஸ்வதி நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது விபரீத முடிவை கண்டு குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து காலாப்பட்டு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பள்ளிக்கு சென்ற 9–ம் வகுப்பு மாணவியை கிண்டல் செய்த வாலிபர்கள்!!
Next post கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் வாலிபரை தீர்த்துக் கட்டினர்: பெண் வாக்குமூலம்!!