92 வயது மூதாட்டியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞன்!!
உத்தரபிரதேச மாநிலம் ஷாமிலி மாவட்டம் கண்தலா என்ற பகுதியில் வசித்த 92 வயது மூதாட்டியை கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10-ந் திகதி அன்று மன்ட்டு (வயது 26) என்ற இளைஞன் பாலியல் துஷ்பிரயோகம் செய்தார்.
இதனையடுத்து பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட அந்த இளைஞனை பொலிசார் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தினர். அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. மருத்துவ அறிக்கையில் அவர் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. மூதாட்டியும் தனது வாக்குமூலத்தில் மன்ட்டு என்ற அந்த இளைஞன் தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறினார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நடந்த விசாரணையில் மன்ட்டு பாலியல் துஷ்பிரயோக குற்றத்தில் ஈடுபட்டதாக நீதிமன்றம் உறுதி செய்தது. அவருக்கான தண்டனை விவரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு வருவதற்கு முன்னதாகவே பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட அந்த மூதாட்டி இறந்து விட்டார்.
Average Rating