திருவரங்குளத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்!!

Read Time:1 Minute, 33 Second

cef62e2b-e530-4a9e-8dee-a8cb460a09c3_S_secvpfதிருவரங்குளம் கேவிஎஸ் நகரைச் சேர்ந்த ரகுமான்கான் என்பரது மனைவி மெஹரிபா (வயது 22) இவர்களுக்கு முதல் பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இப்போது அந்தக் குழந்தைக்கு ஐந்து வயதாகிறது.

இந்நிலையில் இப்போது கர்ப்பமுற்ற மெஹரிபாவிற்கு மூன்று குழந்தைகள் கருத்தரித்திருந்தது. அதனைத் தொடர்ந்து கண்காணித்து கண்ணும் கருத்துமாகப் பராமரித்து வந்தனர். ஏற்கனவே சுகப்பிரசவம் என்பதால் தைரியமாக இருந்தனர்.

இந்நிலையில் நேற்று 31–ஆம் தேதி காலை 7.20மணிக்கு மெஹரிபாவுக்கு பிரசவம் ஆனது. அப்போது 2.300–கிலோ எடையுள்ள இரண்டு ஆண் குழந்தைகளும் 1.800–கிலோ எடையுள்ள ஒரு பெண் குழந்தையும் பிறந்தன.

இந்தப் பிரசவம் புதுக்கோட்டை செந்தில் மருத்துவ மனையில் நடந்தது. மெஹரிபாவிற்கு முதல் பிரசவமும் தொடர்ந்து மருத்துவமும் செய்து வந்த மருத்துவர் சுகன்யா ஜெயலெட்சுமி, மருத்துவர்கள் திலகவதி, செந்தில்அருண், சுப்பையா, இந்து பிரிய தர்ஷினி ஆகியோர் உதவியுடன் இப்பிரசவம் நடந்தது. குழந்தைகள் மூவரும் ஆரோக்கியமாக உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜப்பானில் சிகரெட் விலை ஏற்றம்: புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது!!
Next post கடந்த 8 மாதங்களாக மாற்று திறனாளி பெண் கற்பழிப்பு: தொழிலாளி கைது!!