2 கோடி இதுக்குத்தானா..?

Read Time:2 Minute, 39 Second

tamanna‘சிறுத்தை’, ‘வீரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை தமன்னா ஐதராபாத்தில் பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:–

கேள்வி:– முன்னணி கதாநாயகியாக இருக்கும் நீங்கள் தெலுங்கு படமொன்றில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடுகிறீர்களே?
பதில்:– அந்த படத்தை எடுப்பவர்கள் ஆரம்பத்தில் எனது வளர்ச்சிக்கு துணையாக இருந்தவர்கள். எனவேதான் ஆட சம்மதித்தேன். சுருதிஹாசன் இந்தியில் ஒரு பாடலுக்கு ஆடி உள்ளார். முன்னணி நடிகைகள் குத்தாட்டம் ஆடுவது தவறல்ல.

கே:– ஒரு பாடலுக்கு ஆட ரூ.2 கோடி வாங்கினீர்களாமே?
ப:– எனக்கு எதிராக ஏன் இப்படி எழுதுகிறார்கள் என்று புரியவில்லை. நட்புக்காக தான் ஒரு பாட்டுக்கு ஆட சம்மதித்தேன். எவ்வளவு பணம் தரவேண்டும் என்பது படம் எடுப்பவர்களுக்கு தெரியும். வீணாக இதுபோல் வதந்திகளை பரப்ப வேண்டாம்.

கே:– இந்தியில் நடித்த இரு படங்களும் தோற்று விட்டதே?
ப:– படங்கள் தோல்வி அடைவதும் வெற்றி பெறுவதும் என் கையில் இல்லை. தெலுங்கில் முதலில் நடித்த படம் தோற்றது. தொடர்ந்து வந்த மேலும் இரு படங்களும் தோல்வியை தழுவின. ‘ஹேப்பி டேஸ்’ படம் வெற்றிக்கு பிறகுதான் நான் காலூன்ற முடிந்தது. அதுபோல் இந்தியில் 2 படங்கள் தோற்றாலும்கூட 3–வது படம் ஜெயிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தோல்விதான் வெற்றிக்கு முதல் படி.

கே:– தமிழ், தெலுங்கு படங்களை ஒதுக்கிறீர்களா?
ப:– தமிழில் சூர்யா ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன். தெலுங்கில் பாகுபலி, ஆகடு படங்களில் நடிக்கிறேன்.

கே:– திருமணம் எப்போது?
ப:– திருமணம் பற்றி இன்னும் திட்டமிடவில்லை. திருமணத்தை பற்றி சிந்திக்கவோ அல்லது காதலிக்கவோ எனக்கு நேரம் இல்லை. பிசியாக நடிக்கிறேன். தினமும் மூன்று மணி நேரம்தான் தூங்குவதற்கு நேரம் கிடைக்கிறது. இவ்வாறு தமன்னா கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்திய தேசியக் கொடி இடுப்பில்!!
Next post அமீர் கான் நிர்வாணமாக நின்றது ஏன்?