திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி மாணவி கர்ப்பம்: காதலன் மீது வழக்கு!!

Read Time:2 Minute, 4 Second

7e72cc5a-b039-411e-8e9c-eeed66d39c3b_S_secvpfமதுரை கோவில் பாப்பாகுடியை சேர்ந்தவர் ஹரிராமன் இவரது மனைவி பத்மாவதி. இவர்களது மகள் பாக்கியலட்சுமி (வயது 24) தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. படித்து வருகிறார்.

இவர் அதே ஊரைச் சேர்ந்த தர்மர் என்பவர் வீட்டு முன்பு அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட பரபரப்பு ஏற்பட்டது. தர்மரின் மகன் பார்த்தீபன் (27) தன்னுடன் நெருங்கி பழகி விட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றி விட்டதாக மாணவி பாக்கியலட்சுமி தெரிவித்தார்.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும், சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலைய சப்–இன்ஸ்பெக்டர் சத்யசீலா மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். அப்போது பாக்கியலட்சுமி கூறியதாவது:–

கல்லூரிக்கு பஸ்சில் செல்லும் போது, தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பார்த்தீபனுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் திருமணம் செய்து கொள்வதாக கூறியதால், பல இடங்களுக்கு சென்றேன். மேலும் அவரது வார்த்தையை நம்பி 3 முறை கர்ப்பம் தரித்து, பின்னர் கருக்கலைப்பு செய்தேன். ஆனால் தற்போது சாதியை காரணம் காட்டி, திருமணம் செய்ய மறுப்பதால், தர்ணாவில் ஈடுபட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து இரு தரப்பினரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, திருமணம் செய்வதாக கூறி பெண்ணை ஏமாற்றியதாக பார்த்தீபன் மீது, சமயநல்லூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சத்யசீலா வழக்கு பதிவு செய்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம்: மாணவி தற்கொலை முயற்சி!!
Next post காதலி துப்பட்டாவில் தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை!!