கள்ளத்தொடர்பை கண்டித்த மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவன்!!
தூத்துக்குடி ரோச் காலனியை சேர்ந்தவர் ஜேசுராஜன். இவரது மகள் பிரவீணா (வயது 31). இவருக்கும் பழையகாயலை சேர்ந்த லியோடோஸ் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின்போது பெண் வீட்டார் 130 பவுன் நகை, ரூ.1½ லட்சம் ரொக்கப்பணம் ஆகியவை வரதட்சணையாக கொடுத்தனர். தற்போது பிரவீணா துபாயில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். லியோடோஸ் இங்கிலாந்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் லியோடோசுக்கும், இங்கிலாந்தை சேர்ந்த பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த பிரவீணா கணவரை போனில் தொடர்பு கொண்டு கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கூறினார். இதில் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது லியோடோஸ் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதேபோல லியோடோஸ் மனைவிக்கு அடிக்கடி போன் செய்து மிரட்டி வந்துள்ளார். இச்சம்பவம் குறித்து பிரவீணா சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் செய்தார். புகாரில் கள்ளத்தொடர்பை கண்டித்த என்னை எனது கணவர் மிரட்டி வருகிறார். இதனால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இதையடுத்து இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி. அலுவலக அதிகாரி தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிட்டனர். பின்னர் எஸ்.பி. உத்தரவின் பேரில் தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating