அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு சப்–இன்ஸ்பெக்டர் மனைவி தற்கொலை!!

Read Time:1 Minute, 14 Second

28f03a1e-b33a-4955-a622-916036f97f15_S_secvpfபள்ளிகொண்டாவை அடுத்த அகரஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் தரணி. இவர் தற்போது திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுகா காவல் நிலையத்தில் சப்–இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 40). இவர், உடல்நிலை பாதிக்கப்பட்டு கே.வி.குப்பத்தை அடுத்த கீழ்ஆலத்தூர் கிராமத்தில் உள்ள தாய் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த 4–ந் தேதி அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மயங்கி கிடந்த அவரை சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கே.வி.குப்பம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் காசிநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கள்ளத்தொடர்பை கண்டித்த மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவன்!!
Next post 3 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த கொடூரனின் கருணை மனுவை நிராகரித்த பிரணாப்!!