தியாகதுருகத்தில் 10 வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்த 77 வயது முதியவர்!!

Read Time:2 Minute, 17 Second

da95f25d-dd3e-4077-91b1-48bb6694cb5c_S_secvpfதியாகதுருகம் வெங்கடேஸ்வார நகரை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 32), விவசாயி. இவரது மனைவி வசந்தா (30). இவர்களுக்கு தேவி (12), ராணி (10) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். (இருவரது பெயரும் மாற்றப்பட்டுள்ளது).

நேற்று மாலை தேவியும், ராணியும் வீட்டின் அருகில் உள்ள தைலமர தோப்புக்கு சென்றனர். அப்போது உதய மாம்பட்டு ரோட்டை சேர்ந்த சாமிநாதன் (77) என்பவர் சிறுமிகளை பின் தொடர்ந்து சென்றார்.

தைலமரதோப்பில் யாரும் இல்லாதபோது திடீரென தேவியை விவசாயி கையை பிடித்து இறுக்கி சாமிநாதன் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட முயன்றார். ஆனால் தேவி அவரது பிடியில் இருந்து தப்பினாள். ஆனால் சாமிநாதன் ராணியை குண்டு கட்டாக மறைவான இடத்துக்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதனை பார்த்த தேவி வீட்டுக்கு சென்று தனது பெற்றோரிடம் நடந்த விவரத்தை கூறினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அலறியடித்துக் கொண்டு தைலமர தோப்புக்கு சென்று பார்த்தனர். அங்கு அலங்கோலமான நிலையில் மயங்கி கிடந்த ராணியை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ராணிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அய்யப்பன் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான சாமிநாதனை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலிக்க மறுத்த பெண்ணுக்கு அரிவாள் வெட்டு: பல்கலைக்கழக ஊழியர் கைது!!
Next post விபசார கும்பலிடம் சிக்கிய மாணவிகளை வேட்டையாடிய அரசியல் தலைவர்கள்!!