குடிப்பழக்கத்தை தாய் கண்டித்ததால் மகன் தூக்கு போட்டு தற்கொலை!!
Read Time:1 Minute, 19 Second
பல்லடம் தொலைபேசி நிலையம் அருகே வசிப்பவர் வசந்தி. இவரது மகன் விஜயபாஸ்கர் (வயது23) குடிப்பழக்கம் உள்ள இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் சுற்றித்திரிந்ததாக தெரிகிறது.
இவரை வசந்தி கண்டித்தார். நேற்றும் விஜயபாஸ்கர் குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதனால் வசந்திக்கும் விஜயபாஸ்கருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதன் பின்னர் வசந்தி கடைக்குச் சென்றார். மனமுடைந்த நிலையில் இருந்த விஜயபாஸ்கர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். கடைக்குச் சென்ற வசந்தி திரும்பி வந்து பார்த்த போது மகன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அக்கம்பக்கத்தினர் உதவியுடன் விஜயபாஸ்கரை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் விஜயபாஸ்கர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தொவித்தனர். இது குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating