பெண்ணாடம் அருகே கோவில் விழாவுக்கு சென்ற பெண் மாயம்!!
அரியலூர் மாவட்டம் நம்மகுணம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன், விவசாயி. இவரது மனைவி சுகன்யா (வயது 25). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுகன்யா தனது கணவருடன் பெண்ணாடம் அருகே பூவனூரில் உள்ள தாய் வீட்டுக்கு வந்திருந்தார். சம்பவத்தன்று இரவு கோவில் விழாவில் நடைபெற்ற கரகாட்ட நிகழ்ச்சியை பார்க்க செல்வதாக கூறி சுகன்யா வீட்டை விட்டு சென்றார்.
ஆனால் அதன்பிறகு சுகன்யா வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் சுகன்யா இல்லை. இதையடுத்து சரவணன் தனது மனைவி மாயமானது குறித்து பெண்ணாடம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சுகன்யாவை தேடி வருகிறார்கள்.
திட்டக்குடி அருகே குமாரை கிராமத்தை சேர்ந்தவர் சண்முகாநந்தம். இவரது மகள் அருணா (வயது 20). இவர் திட்டக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்ற அருணா அதன்பிறகு வீடு திரும்பவில்லை. கல்லூரிக்கு சென்று விசாரித்தபோது அருணா கல்லூரிக்கும் வரவில்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரது பெற்றோர் அருணாவை பல இடங்களில் தேடினர். ஆனால் எங்கும் அருணா இல்லை.
இதுகுறித்து அவர்கள் திட்டக்குடி போலீசில் புகார் செய்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான அருணாவை தேடி வருகிறார்கள்.
Average Rating