அரியலூர் எஸ்.பி.அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்!!
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி போலீஸ் சரகம் இளையபெருமாள் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரியங்கா (வயது21). பட்ட படிப்பு மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கங்கைகொண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார்(24) டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இதை தொடர்ந்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இது பற்றி பிரியங்கா தனது பெற்றோருக்கு தெரிவித்தார். இந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள எதிர்ப்பு தெரிவித்து பிரியங்காவுக்கு வேறு மாப்பிள்ளை பார்க்க பெற்றோர் தொடங்கி விட்டார்கள்.
இதை தெரிந்து கொண்ட பிரியங்கா சந்தோஷ்குமார் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி அரியலூர் பெருமாள் கோவிலில் மாலை மாற்றி கொண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கழுத்தில் மாலையுடன் கணவன்– மனைவியாக அரியலூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி.ஜியாவுல் ஹக் முன்னிலையில் பாதுகாப்பு கோரி தஞ்சம் அடைந்தனர்.
Average Rating