மகள்கள் பாலியல் பலாத்காரம்: தந்தைக்கு 15 ஆண்டு ஜெயில்!!

Read Time:2 Minute, 8 Second

22சென்னை அனகாபுத்தூர் அயோத்தியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சோழராஜன் (வயது 43). இவரது மனைவி வசந்தா. இவர் இறந்து 7 வருடங்கள் ஆகின்றன. இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகளும், 13 வயதில் ஒரு மகளும் உள்ளனர். சோழராஜன் அப்பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகின்றார்.

இவர் தினமும் வீட்டுக்கு வரும் போது இரவு குளிர்பானம் வாங்கி அதில் மயக்க மருந்து கலந்து எடுத்துக் கொண்டு மூத்த மகளுக்கு கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனையடுத்து 2-வது மகளையும் அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

2-வது மகள் தான் படிக்கும் பள்ளியில் உள்ள ஆசிரியர்களிடம் அதனை கூறியுள்ளார். பின்னர், ஆசிரியர்கள், குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு சேர்ந்த மணிகண்டன் என்பவரிடம் புகார் செய்துள்ளனர். அவர் தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் போலீசார் சோழராஜன் மீது வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில் வழக்கினை விசாரித்த நீதிபதி ஆனந்தி, மூத்த மகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்கு 10 ஆண்டும், 2-வது மகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதித்து, இவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் ஆனூர் வெங்கடேசன் ஆஜரானார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாராபுரத்தில் பெண்ணை கற்பழித்து கொன்று காட்டுக்குள் பிணம் வீச்சு!!
Next post திருமணமானதை மறைத்து, காதலித்து ஏமாற்றிய வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை!!