3 வயது குழந்தையை மீட்ட நாய்!!

Read Time:1 Minute, 46 Second

dogரஷியாவின் சைபீரியாவில் வசித்து வரும் ஒரு தம்பதியின் 3 வயது மகள் கரினா சிகிட்டோவா. இவள், வீட்டில் யாரும் இல்லாத போது திடீரென மாயமானாள். கரினா வீட்டில் இருப்பதாக அவரது தந்தையும், தந்தையுடன் சுற்றுலா சென்றிருக்கலாம் என அவரது தாயும் நினைத்ததால், குழந்தையை யாரும் தேடவில்லை. 7 நாட்கள் கடந்த பிறகு தான் குழந்தை மாயமானது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவளது பெற்றோர் மீட்புக்குழுவினருடன் பல்வேறு இடங்களிலும் கரினாவை தேடினர். ஆனால் எந்த பலனும் இல்லாததால், குழந்தை இனி கிடைக்கமாட்டாள் என்ற முடிவுக்கு வந்தனர்.

11–வது நாளில் குழந்தையின் செல்ல நாய் காட்டுப்பகுதியில் இருந்து வந்தது. பின்னர் அது காட்டுப்பகுதிக்கு மீண்டும் சென்றது. உடனே அதை மீட்புக்குழுவினர் பின்தொடர்ந்தனர். அடர்ந்த காட்டுப்பகுதியில் சென்ற போது, அங்கே நீண்ட புற்களின் மேல் குழந்தை கரினா படுத்திருந்தாள். உடனே குழந்தையை மீட்புக்குழுவினர் மீட்டு வந்தனர்.

காட்டில் இருந்த நாட்களில் சிறுமி கரினா, பழங்களை தின்றும், ஆற்று நீரை குடித்தும் உயிர் வாழ்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருப்பதியில் ஒரே நாளில் 5 ஆயிரம் ஜோடிகளுக்கு திருமணம்!!
Next post ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை துப்பாக்கியால் சுட்ட வாலிபர்!!