ரூ.2 லட்சம் கேட்டு இளம்பெண் சித்ரவதை: 4 பேர் மீது போலீசார் வழக்கு!!

Read Time:1 Minute, 42 Second

0ce6a3ae-3009-445a-801e-51bc765d529f_S_secvpfகுளச்சலை அடுத்த நெல்லிகோட்டவிளையை சேர்ந்தவர் ஆல்வின் சில்வியா (வயது 27).

இவருக்கும் நாமக்கல்லை சேர்ந்த விமல் ராஜ் (32) என்பவருக்கும் கடந்த 9–5–2008–ல் திருமணம் நடந்தது.

அப்போது 40 பவுன் நகை மற்றும் சீர் வரிசை பொருட்கள் சீதனமாக வழங்கப்பட்டன.

திருமணம் முடிந்த பின்பு விமல் ராஜ் குடும்பத்தினர் ஆல்வின் சில்வியாவிடம் அவரது பெற்றோர் வீட்டில் இருந்து கூடுதலாக ரூ.2 லட்சம் பணம் வாங்கி வரும்படி கூறினர். அதற்கு ஆல்வின் சில்வியா மறுத்ததால் அவர்கள் ஆல்வின் சில்வியாவை சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.

இது பற்றி ஆல்வின் சில்வியா மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு செய்தார். மனுவை விசாரித்த கோர்ட்டு இது தொடர்பாக குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கும்படி உத்தரவிட்டது.

அதன்படி குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் ஹேமலதா இது பற்றி விசாரித்து ஆல்வின் சில்வியாவின் கணவர் விமல்ராஜ், மாமனார் அந்தோணி பிள்ளை, உறவினர்கள் கேரிட்டன், வில்சன் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குரோம்பேட்டையில் கொத்தனார் கொலை: குடிபோதையில் தம்பி ஆத்திரம்!!
Next post குண்டு உடலுக்கு ஆசைப்பட்டு சென்னை வந்த சூடான் வாலிபரின் கண்ணீர் கதை!!