திருச்சி என்ஜினீயரின் காதல் மனைவி கடத்தல்: 4 பேர் மீது வழக்கு!!
திருச்சி உறையூர் மேல பாண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அன்பு செல்வன் (வயது22).என்ஜினீயரிங் படித்துள்ள இவர் ஒரு தனியார் நிறுவனத்தில வேலை பார்த்து வருகிறார்.இந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 20–ந் தேதி கடலூர் மாவட்டம் நெய்வேலி இந்திரா நகரை சேர்ந்த நாராயணசாமி என்பவரது மகள்(20) சஞ்சீவ் பிரீத்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சஞ்சீவ் பிரீத்தி தற்போது சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் இன்பர்மேசன் டெக்னாலஜி படித்து வருகிறார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்ற சஞ்சீவ்பிரீத்தி திடீரென மாயமானார். இதையடுத்து அன்பு செல்வன் பல இடங்களில் அவரை தேடிப்பார்த்தார். அப்போது சஞ்சீவ் பிரீத்தியை அவரது தந்தை நாராயணசாமி மற்றும் அவரது உறவினர்கள் வென்னிலா,கவிதா, ஜோசப் ஆகியோர் கடத்தி சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து உறையூர் போலீசில் அன்பு செல்வன் ஒரு புகார் கொடுத்தார். அதில்,தனது காதல் மனைவியை அவரது தந்தை நாராயணசாமி மற்றும் அவரது உறவினர்கள் வென்னிலா,கவிதா, ஜோசப் ஆகியோர் கடத்தி சென்றுள்ளதாவும் அவர்களிடம் தனது மனைவியை மீட்டு தர வேண்டும் என்றும் கூறி உள்ளார்.
இது குறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சஞ்சீவ் பிரீத்தியை தேடி வருகிறார்கள்.
Average Rating