ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஊழியர் கைது!!
Read Time:1 Minute, 21 Second
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் உடல்நிலை பாதிப்புக்காக சிட்டெர்குல் கிராமத்தில் உள்ள சுகாதார நிலையத்துக்கு சிகிச்சை பெற வந்தார்.
அங்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு ஊசி மூலம் குளுக்கோஸ் ஏற்றப்பட்டிருந்த வேளையில் இன்று அந்த இளம்பெண்ணை நெருங்கிய அந்த ஆஸ்பத்திரியின் ஊழியர், நோயாளி என்றுகூட கருதாமல் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.
அவருக்கு உடன்பட மறுத்து அந்தப் பெண் கூச்சலிடவே அங்கிருந்து தப்பியோடிய அந்த நபரின் செய்கை பற்றி அருகில் இருந்த நோயாளிகளின் உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து, ராம்போரா கிராமத்தை சேர்ந்த முஹம்மது அப்சல் ஷேக் என்ற அந்த ஊழியரை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Average Rating