பணம், நகைகளுடன் மாணவி மாயம்!!
கோவை கருமத்தம்பட்டியை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு ரேவதி (வயது 16) என்ற மகள் உள்ளார். இவர் கோவை மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் பயின்று வந்தார்.
சம்பவத்தன்று வழக்கம் போல் வீட்டிலிருந்து காலை 6.45 மணிக்கு தோழிகளுடன் புறப்பட்டவர் காந்திபுரம் பஸ் நிலையத்துக்கு 8 மணிக்கு வந்தடைந்தார். அப்போது அவர் தோழிகளை முன்னால் கல்லூரிக்கு செல்லும்படி கூறிவிட்டு அவர் சிறிது நேரம் கழித்து வருவதாக கூறினார். அதன்படி தோழிகளும் கல்லூரிக்கு சென்றுவிட்டனர்.
கல்லூரி தொடங்கி நீண்டநேரமாகியும் ரேவதி வகுப்புக்கு வராததால் சந்தேகமடைந்த அவர்கள் வீட்டுக்கு சென்றிருக்கலாம்? என்ற சந்தேகத்தில் ரேவதியின் பெற்றோரை தொடர்பு கொண்டனர். ஆனால் அங்கும் செல்லவில்லை என தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து வீட்டில் பார்த்தபோது 7 பவுன் நகை, 40 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை.
வீட்டில் இருந்த பணம், நகைகளுடன் ரேவதி மாயமானது தெரிய வந்தது.
இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் ரங்கநாதன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating